திருவண்ணாமலை, ஆக. 25- திருவண்ணாமலையில் வேங்கிக்கால் ஏரியில் தூர்வாருவதாகக் கூறி அதிகாரிகள் துணையுடன், ரியல்எஸ்டேட் அதிபர்கள் ஆயிரக்கணக்கான லோடு மண் எடுத்து கொள்ளைய டித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் எதிரே 110 ஏக்கர் பரப்பளவில்வே ங்கிக்கால் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் நூற்றுக்கண க்கான ஏக்கர் விளை நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. அரசு மருத்துவக் கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாவட்ட காவல்துறை அலுவலகம், பெரு வணிக நிறுவனங்க ளும், மாவட்ட அரசு அலுவல கங்கள் என வேங்கிக்கால் பகுதியில் செயல்படு கின்றன. வேங்கிக்கால் ஊராட்சியை பேரூராட்சி யாக தரம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. வேங்கிகால் ஏரியில் 18 ஆழ்துளை கிணறும், 6 திறந்தவெளி கிணறும், 3 குளங்களும், 2 பண்ணை குட்டைகளும் அமைக்க ப்பட்டுள்ளது. இவைகள் மூலம் ஒட்டுமொத்த வேங்கிக்கால் பகுதிக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஏரிக்கு மழைநீரை கொண்டுவரும் மலை ஓடைகள் ஏற்கனவே ரியல் எஸ்டேட் அதிபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மலையிலிருந்து வேங்கிக்கால் ஏரிக்கு வரும் ரங்கம்மாள் மழைநீர் ஓடையை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தவறிய தால், ஏரிக்கு வரும் குறைந்த மழைநீரும் வெளி யேறி விரையாமாகும் சூழல் உள்ளது. இந்நிலையில் வேங்கி கால் ஏரியை தூர்வார தன்னாரவலர்கள் உதவியு டன், ஜல்சக்தி அபியான் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்தார். ஆனால் அதிகாரிகள் துணையுடன் ஆளும் கட்சி, எதிர்கட்சி நிர்வாகிகள் தினசரி 50க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 10 அடி முதல் 15 அடி ஆழம் தோண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட லோடு மண்ணை கடத்தி, ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கும், செங்கல் சூளைக்கும் லோடு 1,200 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்ற னர். மேலும் புதூர், இடுக்குபிள்ளையார் கோயில் பகுதி, மின் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் பைப் லைன்கள் மண் எடுக்கும் போது சேதமடைந்ததால், கடந்த 20 நாட்களாக அந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நடைபெற வில்லை. கிராமத்தில் ஏழை விவசாயிகள் விவசாய நிலத்திற்கு வாகனம் மூலம் ஏரியில் மண் எடுத்துச் சென்றால் வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அபராதம் விதிப்பதோடு வாகன ங்களை பறிமுதல் செய்கின்ற னர். மேலும் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைதும் செய்கின்றனர். விவசாயிகளுக்கு இப்படி நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகள் ஏரியை தூர் வாருவதாகக் கூறி, பட்டப்பகலில் தினசரி 100க்கும் மேற்பட்ட லோடு மண் கடத்துபவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.